படிப்பை நிறுத்த மறுத்த மகளின் முகத்தை சிதைத்த கொடூர தந்தை

Read Time:2 Minute, 1 Second

question-002பாடசாலைப் படிப்பை நிறுத்த மறுத்த 11 வயது மகளின் முகத்தை தந்தையே சிதைத்த கொடூரம் மத்திய பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள மரஞ்ஹிரி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் உய்கே. இவரது 11 வயது மகள், அந்த கிராமத்தில் உள்ள அரச பாடசாலையில் 5 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

தினே{க்கு தனது மகள் படிப்பது பிடிக்கவில்லை. அதனால், படிப்பை நிறுத்திவிடுமாறு பலமுறை கூறி வந்துள்ளார். ஆனால், மகளோ தந்தையின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பாடசாலைக்கு சென்று வந்தார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த தினேஷ், கல்லை எடுத்து தனது மகளின் முகத்தை சிதைத்துவிட்டு தலையிலும் அடித்து காயப்படுத்தினார்.

இதையடுத்து சிறுமி அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறுமி பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, ஹஹபாடசாலை படிப்பை நிறுத்திவிட்டு விறகு விற்கப் போகுமாறு என் தந்தை கூறி வந்தார்.

பல முறை நாள் முழுவதும் சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போடுவார். நான் தொடர்ந்து படித்து வந்ததால் என்னை கொடுமைப்படுத்தி வந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த பொலிஸார், தலைமறைவாகியுள்ள தினேஷை தேடி வருகின்றார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகள்மார் மீது அசிட் வீசிய தந்தை கைது
Next post வயல்வெளியிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் 18 வயது தாய் கைது