வயல்வெளியிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் 18 வயது தாய் கைது
Read Time:1 Minute, 6 Second
பிறந்து சில மணித்தியாலங்களுக்குள்ளேயே வயல்வெளியில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிசுவின் தாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை, மாலமுல்ல வயல்வெளியில் தூக்கியெறியப்பட்ட மேற்படி சிசுவின் தாய், ஊவா மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் மாலமுல்ல பிரதேச வீடொன்றில் பணிப்பெண்ணாக சேவையாற்றியவர் என்றும் பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
18 வயதுடைய மேற்படி தாயிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சிசுவை அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
Average Rating