15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 20 வயது இளைஞன் கைது

Read Time:1 Minute, 45 Second

arrest-policeபுத்தளம் வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் 15 வயதுச் சிறுமி ஒருவருடன் கணவன் – மனைவியாக வாழ்ந்து அந்த சிறுமியை கப்பிணியாக்கிய 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் சிறுமியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதன் பின்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரியாது அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னதாக இருவரும் விரும்பி கணவன் – மனைவியாக வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளாது சிறுமி ஒருவருடன் கணவன் – மனைவியாக வாழ்ந்து வரும் இளைஞனுக்கு எதிராக பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் நடவடிக்கை எடுத்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமி தான் இரண்டு மாதம் கர்ப்பிணியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணின் மூக்கு மற்றும் மேலுதட்டை சாப்பிட்ட எலி
Next post (VIDEO) பறவையை விழுங்கிய டைகர் ஃபிஷ்