புதையல் சிலைகளுக்கு ஆசைப்பட்டு, ஒரு மில்லியனை பறிகொடுத்த பூசகர்
Read Time:55 Second
புதையலில் கிடைத்த தங்க சிலை என கூறி புராதன சிலையை கொடுத்து ஒரு மில்லியன் ரூபா மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இந்து கோவில் ஒன்றின் பூசகரே இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
புதையலில் கிடைத்ததாகக் கூறி ஈயத்தால் செய்யப்பட்ட சிலை, தங்க முதலை மற்றும் பல உருவச் சிலைகளை குறித்த பூசாரி அந்நபரிடமிருந்து வாங்கியுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
Average Rating