இரத்தினபுரியில் ஆணின் சடலம் மீட்பு
Read Time:42 Second
இரத்தினபுரி கெஹெலோவிட்டிகம பகுதியில் ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று காலை 9.30 அளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
சுமார் 40 வயதான ஒருவரே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating