இலங்கையில் இந்திய நடன மாதுகள் கைது
Read Time:1 Minute, 23 Second
பொரல்ல விருந்தகம் ஒன்றில் இருந்து நேற்று ஐந்து இந்திய நடன மாதுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளில் இவர்கள் சுற்றுலா விசாவில் இலங்கை வந்து தொழில் புரிந்துள்ளதாக பொரல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் அத்துருகிரிய வீடொன்றில் தங்கியிருந்துள்ளனர்.
இவர்களை நாடு கடத்தும் நோக்கில், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
20 வயதுக்கு உட்பட்ட இந்த பெண்கள் இலங்கையில் பணி புரிவதற்கன எந்தவித அனுமதியையும் பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய பெண்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் கருத்து தெரிவிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Average Rating