மாணவனின் தாயை துஷ்பிரயோகம் செய்த பாடசாலையின் பழைய மாணவன்
Read Time:1 Minute, 28 Second
மொரட்டுவை பிரதேச பாடசாலை ஒன்றின் மாவணவரொருவரின் தாயை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக மொரட்டுவ பொலிஸாரால் கைது செயற்பட்ட, அதே பாடசாலையைச் சேர்ந்த பழைய மாணவரொருவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கும்படி மொரட்டுவ நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிறார் உத்தரவிட்டுள்ளார்.
கே.எம்.உல்பகாது என்ற நபரே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவராவார்.
சந்தேக நபர் பிரின்ஸ் ஓவ் வேல்ஸ் வித்தியாலயத்தில் மூன்றாம் ஆண்டில் கல்விபயிலும் மாணவரொருவரின் தாயை வித்தியாலயத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக அப்பெண் மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபர் இந்த வித்தியாலயத்தில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் மாணவர்களுக்கு உதவி புரிந்துகொண்டு வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் பழைய மாணவரென தெரிவிக்கிக்கப்படுகின்றது.
Average Rating