சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற, இளைஞன் கைது

Read Time:2 Minute, 31 Second

arrest-slk.polce_12 வயதுடைய மாணவனான சிறுவன் ஒருவனைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற இளைஞர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் முகுனுவட்டவான் பிரதேச பாடசாலை ஒன்றில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் சிறுவன் ஒருவனையே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த சந்தேக நபர் முயற்சித்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு சிறுவன் பயிலும் பாடசாலையில் பௌத்த சமய நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் தனது பாட்டியுடன் கலந்து கொண்ட சிறுவன் அன்றைய தினம் நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்புவதற்காக சிறுவனின் பாட்டி அழைத்த போது தான் அயல் வீட்டுக்காரரான சந்தேக நபருடன் வீட்டுக்கு வருவதாகத் தெரிவித்து சிறுவன் பாடசாலையிலேயே நின்றுள்ளார்.

பின்னர் சந்தேக நபருடன் சிறுவன் நேற்று காலை வீட்டுக்குச் செல்லும் வழியில் முகுனுவட்டவான் பிரதேச குளத்தினருகில் வைத்து இவ்வாறு குற்றமிழைக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ள சிறுவன் சந்தேக நபரிடமிருந்து தப்பி வீட்டுக்கு ஓடிச்சென்று வீட்டாரிடம் விபரத்தைக் கூறியதன் பின்னர் இது தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டினடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த சிலாபம் பொலிஸார் சந்தேக நபரான 34 வயது இளைஞரைக் கைது செய்துள்ளதுடன் இவரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணொளி: பிரபாகரனின் இளைய மகனான வே.பாலச்சந்திரனின் கதை ‘புலிப்பார்வை’யாகிறது
Next post ராமர் பஜனை ஊர்வலத்தில் அருள் வந்து ஆடி, விரலை கடித்துத் துப்பிய இளைஞன்