வீட்டு உரிமையாளரை கொன்று, இருதயத்தை உண்ண முயற்சித்த நபர்

Read Time:2 Minute, 9 Second

016செஸ் விளை­யாட்டு ஒன்று தொடர்­பான வாக்­கு­வாதமொன்­றை­ய­டுத்து தான் வசிக்கும் வீட்டின் உரி­மை­யா­ளரை கொன்று அவ­ரது மார்பை பிளந்து அவ­ரது இரு­த­யத்தை நப­ரொ­ருவர் உட்­கொள்ள முயற்­சித்த விப­ரீத சம்­பவம் அயர்­லாந்தில் இடம்­பெற்­றுள்­ளது.

அயர்­லாந்­தி­லுள்ள பழைமைவாத கத்­தோ­லிக்க புத்திஜீவிகள் அமைப்பில் கொள்கை ஆய்­வா­ள­ராக பணி­யாற்­றிய டொம் ஒ கொர்மன் என்­ப­வரை, அவ­ரது வீட்டில் அவ­ருடன் வசித்து வந்த இத்­தா­லி­ய­ரான சவெ­ரியோ பெல்­லன்ட (34வயது) கொன்று இவ்­வாறு இரு­த­யத்தை உண்ண முயற்­சித்­துள்ளார்.

ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற மேற்­படி படு­கொலை தொடர்­பான வழக்கு டுப்ளின் நக­ரி­லுள்ள பிளன்­சர்ட்ஸ்­டவுன் எனும் இடத்­தி­லுள்ள நீதி­மன்­றத்தில் திங்­கட்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது.

தனது தாயா­ருடன் டுப்­ளினின் புற­ந­கரப் பகு­தி­யி­லுள்ள மேற்­படி வீட்டில் வசித்து வந்த டொம் (39 வயது), 2012 ஆம் ஆண்டில் தாயார் இறந்­ததும் அந்த வீட்­டி­லி­ருந்த அறை­யொன்றை பெல்­லன்ட்­டிற்கு வாட­கைக்கு விட்­டுள்ளார்.

இந்­நி­லையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை டொம்மும் பெல்­லன்ட்டும் செஸ் விளை­யாட்டில் ஈடு­பட்ட போது அவர்­க­ளி­டையே கடும் தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது.

சின­ம­டைந்த பெல்லன்ட், டொம்மை பல தடவைகள் கத்தியால் குத்தி படுகொலை செய்த பின் அவரது இருதயத்தை உண்ண முயற்சித்ததாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விக்ரம் பாணியை பின்பற்றும் தனுஷ்!
Next post 67 வயது முதியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு