67 வயது முதியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
Read Time:1 Minute, 9 Second
குளியாபிடிய பகுதியில் 67 வயது முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குளியாபிடிய – நவசிகஹவத்தை – வெலிபெத்த கஹமுல்ல பிரதேசத்தில் வீதிக்கு அருகில் வீழ்ந்து கிடந்த ஒருவர், அவரது சகோதரியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இவர் நவசிகஹவத்தை – வெலிபெத்த கஹமுல்ல பகுதியைச் சேர்ந்தவராவார்.
தலையில் தாக்கப்பட்டமையினாலேயே இவர் உயிரிழந்துள்ளதாக நேற்று இடம்பெற்ற பிரேதப் பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவராத நிலையில் குளியாபிடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating