67 வயது முதியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

Read Time:1 Minute, 9 Second

dead-003குளியாபிடிய பகுதியில் 67 வயது முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குளியாபிடிய – நவசிகஹவத்தை – வெலிபெத்த கஹமுல்ல பிரதேசத்தில் வீதிக்கு அருகில் வீழ்ந்து கிடந்த ஒருவர், அவரது சகோதரியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இவர் நவசிகஹவத்தை – வெலிபெத்த கஹமுல்ல பகுதியைச் சேர்ந்தவராவார்.

தலையில் தாக்கப்பட்டமையினாலேயே இவர் உயிரிழந்துள்ளதாக நேற்று இடம்பெற்ற பிரேதப் பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவராத நிலையில் குளியாபிடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டு உரிமையாளரை கொன்று, இருதயத்தை உண்ண முயற்சித்த நபர்
Next post சம்பளத்தை உயர்த்திய லட்சுமி மேனன்!