தந்தையால் 9 மாத குழந்தை கொலை
Read Time:1 Minute, 14 Second
மாத்தறை வலஸ்முல்ல – மத்தெனிய பகுதியில் தந்தை ஒருவர் தமது ஒன்பது மாத குழந்தையின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார்.
குறித்த தந்தை சில மாதங்களுக்கு முன்னர் தாய் மற்றும் குழந்தையை கைவிட்டுச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இடைக்கிடையில் நலன் விசாரிப்பதாக கூறி, தாயின் வீட்டுக்கு வருவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
இதன்படி நேற்றைய தினம் அவ்வாறு மத்தெனிய பகுதியில் உள்ள தாயின் வீட்டுக்கு சென்ற அவர், ஒன்பது மாதங்களே ஆன குழந்தையை கடத்திச் சென்று கழுத்தை வெட்டி கொலை செய்திருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தந்தை தப்பி ஓடியுள்ள நிலையில் அவரை கைது செய்ய காவற்துறையினர் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating