போலி மாணிக்க கல் விற்ற நபரை தேடி பொலிஸ் வலைவீச்சு
Read Time:1 Minute, 1 Second
வெளிநாட்டவர் ஒருவரை ஏமாற்றி போலி மாணிக்க கல் விற்பனை செய்த நபர் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்டியாகொட – தொடம்வில பகுதியில் மாணிக்க கல் விற்பனை நிலையம் ஒன்றை வைத்திருந்த நபரே இவ்வாறு போலி மாணிக்க கல் விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜேர்மன் பிரஜை ஒருவருக்கு மூன்று போலி மாணிக்க கற்களை 100 யூரோவிற்கு குறித்த நபர் விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டவரிடம் இருந்து மூன்று மாணிக்க கற்களையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
Average Rating