6 பேரும் மாறி, மாறி கற்பழித்தனர்: 51 வயது டென்மார்க் பெண் பரபரப்பு வாக்குமூலம்

Read Time:4 Minute, 3 Second

rape.group_rapeடென்மார்க் நாட்டை சேர்ந்த 51 வயது பெண் இந்தியாவை கண்டு களிப்பதற்காக புது டெல்லி வந்தார். பர்கஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கிய அவர், கடந்த 14-ம் தேதி இரவு கன்னவ்ட் பேலஸ் பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பினார்.

ஓட்டலுக்கு போகும் வழியை மறந்துவிட்ட அந்த பெண், திக்கு திசை தெரியாமல் தடுமாறினார். புது டெல்லி ரெயில் நிலையம் அருகே நின்றிருந்த சிலரிடம் ஓட்டலின் பெயரை கூறி எந்த வழியாக போக வேண்டும்? என்று விசாரித்தார்.

தாங்களே அழைத்து சென்று விடுவதாக தெரிவித்த அந்த கும்பல், அவரை அழைத்து சென்றது. இருட்டான ஒரு வீதி வழியாக சென்றபோது கத்தியை காட்டி தனிமையான ஓரிடத்துக்கு அழைத்து சென்றது.

7 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட அந்த சுற்றுலா பயணி, இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.

தனது கைப்பையையும் அவர்கள் பறித்து கொண்டு ஓடி விட்டதாக புகாரில் குறிப்பிட்டார். டெல்லியில் உள்ள டென்மார்க் நாட்டின் தூதரத்திலும் இந்த கொடிய அனுபவம் தொடர்பாக புகார் அளித்து உடனடியாக நாடு திரும்ப தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், 15 பேரை பிடித்துவந்து விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் டெல்லி தீவிர தேடுதல் வேட்டை நடத்தி டென்மார்க் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரில் 2 பேரை கைது செய்தனர். அவர்களின் பெயர் ராஜா மற்றும் மகேந்தர் என்று தெரிய வந்துள்ளது. மற்ற 4 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

இதற்கிடையில், டெல்லியில் சமூக சேவை செய்து வரும் ஒருவரிடம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் தற்போது ஊடகங்களின் மூலம் வெளியாகியுள்ளது.

அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளதாவது:-

ஓட்டலுக்கு அழைத்து செல்வதாக கூறிய அவர்கள் இருட்டான பகுதியில் இருந்த ரெயில்வே மனமகிழ் மன்றத்தின் அருகே கத்தியை காட்டி மிரட்டி என்னிடம் இருந்த பொருட்களை பறித்து கொண்டனர்.

அவர்களில் ஒருவன் ரப்பர் ஒட்ட பயன்படுத்தும் எரிசாராயத்தில் நனைத்த கைக்குட்டையை எனது முகத்தின் மீது வைத்து அழுத்தினான்.

அவனது கையை நான் தட்டிவிட முயன்றும் என்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டான். சில நிமிடங்களுக்குள் நான் மயங்கி விழுந்தேன்.

நான் அரை மயக்கத்தில் மயங்கி கிடந்தபோது வயதான பெண் என்றும் பாராமல் அவர்கள் மாறிமாறி என்னிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டதை என்னால் உணரவும், பார்க்கவும் முடிந்தது.

ஆனால், அவர்களை எதிர்த்து போராடும் சக்தி என்னிடம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ’13ம் பக்கம் பார்க்க’ படத்திற்காக சுருட்டு பிடித்த நளினி
Next post நீண்ட காலத்திற்கு பின், கைகுலுக்கிக் கொண்ட ஹிந்தி நடிகை ரேகா, ஜெயாபச்சன்