அனுமதி மறுத்ததால் வைத்தியசாலை வளாகத்தில் குழந்தை பெற்ற எயிட்ஸ் நோயாளி

Read Time:2 Minute, 7 Second

pre.family-planning-dr-splஇந்தியாவில் பிரசவத்துக்கு அனுமதி மறுத்ததால் வைத்தியசாலை வளாகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார்.

இதனால் எய்ட்ஸ் நோய் பாதித்த அவர் கர்ப்பம் அடைந்தார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணி ஆன அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. எனவே அவர் பிரசவத்துக்காக பிலாஸ்பூரில் உள்ள சத்தீஸ்கர் மருத்துவ அறிவியல் கழக வைத்தியசாலைக்கு நள்ளிரவில் வந்தார்.

அவர் எய்ட்ஸ் நோயாளி என்பதை அறிந்த வைத்தியசாலை ஊழியர்கள் அப்பெண்ணை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. தற்போது வைத்தியர் இல்லை. நாளை வாருங்கள் என தெரிவித்தனர்.

ஆனால் வீட்டுக்கு திரும்பி செல்ல முடியாத நிலையில் இருந்த அப்பெண் கடும் குளிரிலும் வைத்தியசாலை வளாகத்திலேயே உட்கார்ந்திருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு அங்கேயே குழந்தை பிறந்தது. அதை அறிந்ததும் வைத்தியசாலை ஊழியர்கள் அதிவிரைவாக அவரை பிரசவ வார்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வைத்தியசாலை பொறுப்பாளர் டாக்டர் லகன்லாலிடம் புகார் செய்யப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இது குறித்து விசாரணை நடத்தப்படும். அதில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண் குழந்தையை பிரசவித்தார் கன்னியாஸ்திரி!
Next post மோசடியில் ஈடுபட்ட யாழ். பெண்ணுக்கு, நோர்வே ஒஸ்லோவில் சிறைத்தண்டனை!