மரண வீட்டில் சன நெரிசல்: 18 பேர் பலி
Read Time:51 Second
இந்தியாவின் மேற்கு மும்பையில் மத குரு ஒருவரின் மரண சடங்கில் ஏற்பட்ட சன நெருக்கடியில் 18 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
தாவுடி போஹாரா என்ற சியா முஸ்லிம் இன மக்களின் 102 வயது தலைவர் சைட்னா மொஹட் பர்ஹாமிடின் இறுதி கிரிகை இன்று நடைபெறுகிறது.
அவருக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த போது, அவரது ஜனசா வைக்கப்பட்டிருந்த வீட்டின் வாசல் கதவு மூடப்பட்டதை அடுத்து இந்த நெரிசல் ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
Average Rating