தற்கொலை செய்து கொண்ட, யாழ் பல்கலைக்கழக மாணவி: பின்னணியில்…
தற்கொலை செய்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவி ரட்ணசிங்கம் வித்தியா(வயது 24) என்பவரை ஊடகவியலாளர் என்று தன்னை கூறித்திரியும் பிரதீபன் என்பவர் காதலித்ததாகவும், இவர் ஒரு இராணுவ புலனாய்வாளர் என சக ஊடக நண்பர்கள் தெரிவித்ததனால் அம் மாணவியின் குடும்பத்தினர் எதிர்த்ததனால் தான் அவர் இம்முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்மாணவி பல்வேறு திறமைகளை கொண்டிருந்ததோடு பல தரப்பு நட்புகளை கொண்டிருந்தமை அவரது இறுதி மரணசடங்கில் அவதானிக்க முடிந்தது.
இம்மரண நிகழ்வில் கலந்து கொண்ட பலர் இம்மாணவி இவ்வாறான முடிவினை எடுக்க காரணமானவரை கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தற்கொலை தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் காதல் விடயம் தான் இதற்கு முக்கிய காரணம் என பரவலாக தெரிவிக்கப்படும் நிலையில் மாணவியின் காதலன் தலைமறைவு ஆகியுள்ளார்.
Average Rating