இலங்கை இளைஞருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரண தண்டனை நிறைவேற்றம்
Read Time:1 Minute, 6 Second
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொலை வழக்கொன்றில் குற்றவாளியாக காணப்பட்ட இலங்கை இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரவீந்திர கிருஷ்ண பிள்ளை என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த நபர் ஒருவரை 2008 ஆம் ஆண்டில் கொலை செய்தாக மேற்படி இளைஞர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
இறந்தவருக்கு இழப்பீடாக ‘இரத்தப்பணம்’ பெறுவதற்கு இறந்தவரின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததையடுத்து மேற்படி இலங்கை இளைஞருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
Average Rating