தேரர் மீது வில்கமுவவில் தாக்குதல்
Read Time:1 Minute, 9 Second
வில்கமுவ பிரதேசத்தில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்ட வண. உடுவெல சுமித தேரர் மீது வில்கமுவ பிரதேசத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.
மதுபோதையில் இருந்த நபரே தேரர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கங்காசிரிகம விஹாரைக்கு முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த போதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிக்கு மீதான தாக்குதலை கண்டித்து வில்கமுவ மற்றும் ஹெட்டிப்பொல மக்கள் கறுப்புக்கொடிகளை கட்டியதுடன் கடைகளையும் பூட்டினர்.
தாக்குதலுக்கு உள்ளான பிக்கு வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating