மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர், கட்டிலின் கீழ் உறக்கத்தில் குறட்டை; கையும் மெய்யுமாக கணவரிடம் பிடிபட்டார்

Read Time:2 Minute, 19 Second

sleep_apneaகுடிபோதையில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற மரக்கறி வியாபாரியொருவருக்கு கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டில் கட்டிலுக்கு கீழ் நித்திரை கொண்டு குறட்டை விட்டதால் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் கணவரிடம் கையும் மெய்யுமாக சிக்கிக் கொண்ட சம்பவமொன்று கிராந்துருகோட்டே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கிராந்துருகோட்டே ரொட்டவெல பிரதேசத்தைச் சேர்ந்த 28வயதான மரக்கறி வியாபாரியே சிக்கிக் கொண்டவராவார்.

இந்த நபர் தமது நாளாந்தக் கடமைகளை முடித்துக்கொண்டு மது அருந்திக் கொண்டிருந்தபோது கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் ஞாபகம் வந்துள்ளது. இரவு 9.00 மணியளவில் இவர் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான அந்த அழகிய பெண்ணின் கணவர் வெளி மாவட்டமொன்றில் கடமையாற்றுகின்றார். அப்பெண்ணின் வீடு சென்ற மரக்கறி வியாபாரி, பிள்ளைகள் நித்திரை கொண்டபின் சல்லாபித்துவிட்டு பெண்ணின் வேண்டுகோளின் பேரில் கட்டிலுக்கு கீழ் நித்திரை கொண்டுள்ளார்.

களைப்பினாலும் போதையினாலும் மரக்கறி வியாபாரி அயர்ந்து குறட்டையிலே உறங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பெண்ணின் கணவர் வீடு வந்துள்ளார்.

குறட்டை செய்ததால் கணவன் கட்டிலுக்கு கீழிருந்த மரக்கறி வியாபாரியை பிடித்து நையப்புடைத்து கிராந்துருகோட்டே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்மா, அப்பா கண்டிப்பு + கண்காணிப்பு… பேஸ்புக்கில் இருந்து வெளியேறிய 30 லட்சம் இளசுகள்!
Next post கைகள் இல்லாததால், கால்களால் சாதனை படைத்து வரும் சிறுமி