(PHOTOS) கத்தியுடன் நிர்வாணமாக நின்று காதலியை மிரட்டிய நபர்
Read Time:1 Minute, 20 Second
காதலியின் பெற்றோர்கள் திருமணத்துக்கு அனுமதியளிக்க மறுத்ததால் தனது காதலியை கத்திமுனையில் பணயக்கைதியாக பிடித்து வைத்துடன் தனது ஆடைகளையும் களைந்துகொண்டு நிர்வாண கோலத்தில் நின்ற ஒரு நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
32 வயதான இந்த நபர் 29 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பினான்.
ஆனால் இரு வீட்டிலும் பெற்றோர்கள் திருமணத்திற்கு மறுத்ததால் அந்த இளைஞன், அவனின் காதலியை கத்திமுனையில் மிரட்டி கட்டடமொன்றின் கூரைமேல் நிற்கவைத்தான்.
இதை நூற்றுக்கணக்கானோர் பாரத்துக்கொண்டிருந்தவேளை அவன் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றான். தனது காதலியையும் ஆடைகளைக் களையுமாறு உத்தரவிட்டான்.
இதற்கிடையில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் பொலிஸார் அங்குவந்து மேற்படி நபரை மடக்கிப் பிடித்தனர்.
Average Rating