நாய் போன்று குரைக்கும் ஆடு

Read Time:1 Minute, 26 Second

3913Sheepஇங்கிலாந்திலுள்ள ஆடொன்று நாயைப் போன்று குரைக்கின்றது. இந்த ஆடு தன்னை ஒரு நாயாகவே நினைத்து வாழ்கிறதாம்.

ரோய் எனப் பெயரிடப்பட்ட இந்த ஆட்டினை இங்கிலாந்தின் லங்ஷெயரிலுள்ள லிஸா இவன்ஸ் என்பவர் ஆடுகள் அறுக்கப்படும் இடத்திலிருந்து காப்பாற்றியுள்ளார். அன்றிலிருந்து ரோய் லிஸாவின் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே வாழ்ந்து வருகிறது.

லிஸா தனக்கு சொந்தமான பண்ணை நிலத்திற்கு சென்ற வேளையில் இந்த ஆட்டினைக் கண்டு இரக்கம்கொண்டு அதனை மீட்டுள்ளார்.

‘ரோய் நாய்போன்றே இருக்கிறது. தான் ஒரு ஆடு என்பது ரோய்க்கு தெரியும் என நான் நினைக்கவில்லை’ என லிஸா தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் ஆடுகளை மேய்க்கும்போது பின்தொடர்கிறது. ஏனைய விவசாயிகள் ஆடுகளை மேய்க்கும் பன்றி அல்லது நாயை வைத்திருக்கிறார்கள். ஆனால் எங்களிடம் ஆடுகளை மேய்க்கும் ஆடு உள்ளது என லிஸா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மண்டேலாவின் சிலையின் காதில் மறைந்திருக்கும் பித்தளை முயல்
Next post மனித புதைகுழியை பார்வையிட, செல்வம் எம்.பி.க்கு அனுமதி மறுப்பு