அழகிரிக்கு நேரம் சரியில்லை: சனீஸ்வர பகவானுக்கு மனைவி பரிகார பூஜை

Read Time:1 Minute, 42 Second

ind.alagiri-wifeகட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரிக்கு நேரம் சரியில்லை என ஏற்கெனவே ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.

இதற்காக அவரது மனைவி காந்தி அழகிரி, கடந்த வாரம் தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வர பகவான் கோயிலுக்குச் சென்று பரிகார பூஜையை நடத்தியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை 5 கார்களில் குச்சனூர் கோயிலுக்குச் சென்ற அவரது ஆதரவாளர்கள் முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு காந்தி அழகிரியை அழைத்துள்ளனர்.

அதற்குப் பின் காரில் சென்ற காந்தி அழகிரி அங்குள்ள சுரபி ஆற்றில் கை, கால்களை அலம்பிவிட்டு கொடிமரத்தைச் சுற்றிய பின் எள், பொரியை போட்டு காக்கை பொம்மையை சாத்தி எள் தீபமேற்றி வழிபட்டார்.

பின்னர் கோயில் சன்னதிக்குச் சென்று கணவரின் மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்தார். பின்னர் பரிகார பூஜை செய்து கோயிலுக்கு தான் கொண்டு வந்த 75 கிலோ அரிசியை வழங்கிவிட்டுச் சென்றார்.

குச்சனூர் சனீஸ்வர பகவான், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனதை மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மத்திய கிழக்கில் பணி புரிந்த மகளை இழந்த நான், மகனையும் இழந்துள்ளேன்..
Next post இளைஞன் ஒருவருடன் மகள் சல்லாபத்தில் ஈடுபட, காவலாக இருந்த தந்தை