நுளம்பு வலை கயிற்றில் சிக்கி, கிளிநொச்சி சிறுமி மரணம்

Read Time:1 Minute, 30 Second

nulampu.valaiகிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் நுளம்பு வலைக்கு கட்டுப்பட்டிருந்த கயிறு இறுகிய நிலையில் 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். சுரேந்திரன் கீர்த்தனா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

மேற்படி பகுதியிலுள்ள குறித்த சிறுமி நேற்று முன்தினம் கட்டிலில் படுத்துக்கொண்டு நுளம்பு வலைக்கு கட்டப்பட்டிருந்த கயிற்றோடு விளையாட்டிக்கொண்டிருந்த வேளையில், கயிறு குறித்த சிறுமியின் கழுத்தில் இறுகியுள்ளது.

இதனை அவதானித்த பெற்றோர் குறித்த சிறுமியை உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சிறுமி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.வாகப்தீன் சடலத்தினை பிரேத பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கிளிநொச்சி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய நேற்று மாலை சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிகினி ஆடையில், கவர்ச்சியாக கார் கழுவும் பெண்கள்.. (+18 VIDEO)
Next post அமெரிக்காவில் தீ விபத்து: 6 பேரை காப்பாற்றிய 8 வயது சிறுவன் பலி