முச்சக்கர வண்டி விபத்து, குழந்தை உயிரிழப்பு
Read Time:1 Minute, 8 Second
தாலாதுஓய – எலிகேவல – மாரஸ்ஸன பாலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்ததில், சிறு குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த முச்சக்கர வண்டி சாரதியின் கட்டுக்காட்டை இழந்து, சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் மாரஸ்ஸ – ஹீதகோட பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதான சிறு பிள்ளை ஒன்று பலியாகியுள்ளது.
இதேவேளை விபத்தில் மேலும் இரு சிறு பிள்ளைகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Average Rating