காணாமல் போன இளைஞன், பயணப்பையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
கடந்த 21 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் கல்முனை சாய்ந்தமருது தோணா முகத்துவாரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முகமட் அப்சான் என்ற 20 வயதுடைய இளைஞன் நேற்று வெள்ளிக்கிழமை பயணப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாய்ந்தமருது 2ஆம் பிரிவு காரியப்பர் வீதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞன் தொழில்வாய்ப்பிற்காக கட்டார் நாட்டிற்கு நேற்று வெள்ளிக்கிழமை விமானத்தில் செல்ல இருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றுப்பகல் 12.00 மணியளவில் சாய்ந்தமருது தோணா பகுதியில் பயணப்பையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதை பொதுமக்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் உயிரிழந்தவர் 21ஆம் திகதி காணாமல் போன முகமட் அப்சான் என உறுதிபடுத்தியுள்ளனர்.
Average Rating