கட்டுநாயக்கவில் தங்க நகை வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டார்!

Read Time:1 Minute, 21 Second

pistrol.Shootingகட்டுநாயக்க 18 ஆவது மைல்கல்லில் வீ மோல வீதியில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியிளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நீர்கொழும்பு, ஆண்டி அம்பலம பிரதேசத்தைச் சேர்ந்த ராமநாதன் புண்ணிதரன் என்ற 37 வயதான நபரே சம்பவத்தில் கொல்லப்பட்டவராவார்.

கொலை செய்யப்பட்ட நகைக் கடை வர்த்தகர் என தெரிவிக்கப்படுகிறது. கொலைச் சம்பவம் ஒன்றின் சந்தேக நபரான இவர் குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் கையொயாப்பமிட்டு திரும்பும் போதே மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திலங்க சுமதிபாலவின் வாகனம் விபத்து
Next post நடிகை வித்தியா பாலன் (அவ்வப்போது கிளாமர்)