திருமலையில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்
Read Time:1 Minute, 12 Second
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் திருகோணமலையில் நேற்று நடைபெற்றது.
திருகோணமலை நகர சபை கேட்போர் கூடத்தில் நேற்றுமுற்பகல் 10 மணிளவில் இந்தக் கூட்டம் ஆரம்பமானதாக தமிழரசுக் கட்சியின் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
வட மாகாண சபையின் ஆட்சி மற்றும் ஜெனீவா பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating