தமிழ் படங்களை கைகழுவும் ஜனனி

Read Time:1 Minute, 55 Second

004kதமிழ் படங்களில் கவனம் செலுத்துவதை கைவிட்டார் ஜனனி ஐயர். தமிழில் அவன் இவன், பாகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர்.

பாலா இயக்கத்தில் அவன் இவன் நடித்தபிறகு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த ஜனனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேக்கடி என்ற ஒரு படம் மட்டுமே தமிழில் அவருக்கு கைவசம் உள்ளது.

இந்நிலையில் 3 டாட்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படம் வெளியாகி வெற்றிபெற்றதையடுத்து அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வந்தன.

மோகன்லால், பரத்துடன் கூதரா மற்றும் மோசயிலே குதிர மீனுகள் உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் வாய்ப்புகள் இல்லாததால் மனம் வெறுத்த ஜனனி, தமிழ் சினிமாவை கைகழுவிவிட்டு மல்லுவுட்டில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்.

தமிழில் நய்யாண்டி படத்தில் இயக்குனருடன் ஏற்பட்ட மோதலையடுத்து தமிழ் படங்களை குறைத்துக்கொண்டு மலையாளத்தில் கவனம் செலுத்திவந்த நஸ்ரியா நாசிமுக்கு திடீரென திருமணம் முடிவாகி இருப்பதால் அவரது இடத்தை பிடிக்க ஜனனி உள்ளிட்ட மல்லுவுட் நடிகைகள் போட்டியில் குதித்துள்ளனர்.

கோலிவுட் டாப் ஹீரோயின்களும் நஸ்ரியா வாய்ப்புகளை தங்களை நோக்கி திருப்புவதற்கான தூது வேலைகளை தொடங்கி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) பங்களாதேஷ் உலக முஸ்லிம் மாநாட்டில் கலந்து கொள்ள ரயிலில் பயணித்த மக்கள்
Next post ஊழல் குற்றச்சாட்டில், இத்தாலி பெண் மந்திரி ராஜினாமா