சட்டவிரோத ஆட்கடத்தல்: இலங்கையர் நால்வர் உட்பட ஐவருக்குப் பிரித்தானியாவில் சிறைத் தண்டனை
சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களைப் பிரித்தானியாவுக்கு கடத்தும் முகவர்களாகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதனையடுத்து நான்கு இலங்கையர்கள் உட்பட உட்பட ஐவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிரித்தானிய கென்ட் பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு முகவர் நிலையம் ஆகியனவற்றின் ஒத்துழைப்புடன் பிரித்தானிய உள்துறை செயலகம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆட்களைப் பிரித்தானியாவுக்கு கடத்துவதற்காக தலா 4500 பவுண்கள் வரையில் இவர்கள் பெற்றுக் கொண்டமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
குற்றவாளிகளாகக் காணப்பட்ட சுதர்ஷன் ஐயக்கொடி, சுப்ரமணியன் விக்னராஜா,கமலநேசன் கந்தையா, ஜோன் அனீஸ், சௌந்தரநாயகம் உவைஸ் மற்றும் பிரித்தானிய பிரஜையான அமிர்ஜித் முஜாஹர் ஆகியோருக்கே 3 தொடக்கம் 5 வருடங்கள் கொண்ட வௌ;வேறான கால எல்லையுடனான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Average Rating