வாகரையிலும் கரையொதுங்கிய மூங்கில் படகு
மட்டக்களப்பு வாகரை பிரதேசம் கதிரவெளி கடற்கரையில் இன்று அதிகாலை மூங்கில் மரங்களைக் கொண்டு கட்டப்பட்ட மியன்மார் நாட்டு படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.
பாரிய மூங்கில் மரங்களைக் கொண்டு குறித்த குறித்த படகு கட்டப்பட்டுள்ளது.
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இப்படகினை கரையிலிருந்த மீனவர்களும் பொதுமக்களும் கரைக்கு இழுத்து வந்துள்ளனர்.
இதேபோன்றதொரு படகு ஒன்று கடந்த வாரம் பாலமீன்மடு கடற்கரையோரத்தில் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இப்படகினை வாகரை பொலிசார் தமது பாதுகாப்பில் வைத்துள்ளதுடன் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.