நேபாள பஸ் விபத்தில் 10 பக்தர்கள் பலி: 56 பேர் படுகாயம்

Read Time:1 Minute, 16 Second

accisdentநேபாள நாட்டின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள சிந்ஹூலி என்ற இடத்தில் இருந்து சுமார் 66 பக்தர்கள் பஸ்சில் ஹோதாங் என்ற இடத்திலுள்ள இந்து கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். வழியில் 300 மீட்டர் ஆழமுள்ள கிடுகிடு பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்தில் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 7 பேரும் பரிதாபமாக செத்தனர். மற்ற 56 பக்தர்களும் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர். இவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.

இவர்களில் பலரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. எனவே சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து நேபாள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெயின்ட் பாஸ் சட்டவைத்திய அதிகாரியிடம் ஆஜர்
Next post ஏப்ரல் 11 இல் பிரமாண்டமாக வெளியாகிறது ‘கோச்சடையான்’: அதிகாரபூர்வ அறிவிப்பு