திருமணமான பெண்ணுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக பாலியல் தொந்தரவு
Read Time:1 Minute, 27 Second
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 47 வயது பெண்ணுக்கு தொலைபேசி மூலம் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் தொலைபேசியில் பேசிய பட்டதாரி இளைஞரொருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கும்படி நுகேகொடை நீதிவான் நீதிமன்ற நீதிபதி அருணி ஆட்டிகல உத்தரவிட்டார்.
நுகேகொடை பிரதேசத்திலுள்ள பிரபலஹோட்டலொன்றில் கடமையாற்றும் 27 வயதான டபிள்யூ. தமித் ரன்மல் என்ற இளைஞனே விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.
சந்தேக நபர் முறைப்பாட்டாளரான பௌண்ணுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ஆபாசமாகப் பேசி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
பின்னர் இப்பெண் மிரிஹான சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் பணியகத்தைச் சேர்ந்த பொலிஸார் தந்திரோபாயமாக இளைஞனை தொலைபேசி மூலம் நுகேகொடை பிரதேசத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.
Average Rating