வான் மோதியதில் யாழ். முதியவர் பலி
Read Time:1 Minute, 14 Second
நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த வானொன்று இன்று காலை 9.30 மணியளவில் வீதியை கடக்க முயன்ற நெல்லியடி வதிரியைச் சேர்ந்த பொன்னம்பலம் தங்கராசா ராசாகோபன் (65) என்பவரை மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக நெல்லியடி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நெல்லியடி கொமர்ஷல் வங்கிக்கு முன்னால் இடம்பெற்றது.
இதனையடுத்து குறித்த வாகனச் சாரதி வாகனத்தினை அவ்விடத்திலேயே விட்டு தப்பியோடியுள்ளார் எனவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நெல்லியடி போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Average Rating