பாதிரிமார்கள் சிறார்களை பாலியல் துன்புறுத்தல்: வத்திக்கனுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்
வத்திக்கன் பாதிரிமார்கள் ஆயிரக்கணக்கான சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய விடயங்களை வத்திக்கன் நிர்வாகம் திட்டமிட்ட முறையில் மறைத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம்சுமத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்துள்ளது.
சிறார்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியவர்கள் மற்றும் உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பாதிரிமார் உடனடியாக பதவிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேவாலயங்களில் சிறார்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக வத்திக்கான் ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளது.
இந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கையில் பாலியல் துன்புறுத்தல்களை மட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Average Rating