உறுப்பு நாடுகளின் தீர்மானத்திலேயே சர்வதேச விசாரணை -ஐ.நா

Read Time:1 Minute, 57 Second

ltte-warஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டின் போது, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதன் அடிப்படையில் செயற்பட தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனின் உதவி பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள்ளார்.

நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பின்போது, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்திய பிரேரணை நிறைவேற்றப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அவர், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமா? இல்லை? என்பது தொடர்பில் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டும். அவர்களுக்கான தகவல்கள் அனைத்து வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் தமது பொறுப்புக் கூறும் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்பனை ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் வலியுறுத்துகிறது.

ஜெனீவா மாநாட்டின் போது இலங்கை தொடர்பில் உறுப்பு நாடுகள் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை செயற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவை இழுத்து மூடச் சொல்லி அதிகாலையில் கலாட்டா செய்த சிறுவன்!
Next post விசித்திர தோல் வியாதியால், பாதிக்கப்பட்ட பெண்ணை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்த கொடூரம்