சிறுவன் நீரோடையில் வீழ்ந்து மரணம்!

Read Time:1 Minute, 49 Second

boy-01வத்துகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள மடவளைப் பிரதேசத்தில் மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் நீர் நிலை ஒன்றில் வீழ்ந்து மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முடவளையின் புகையிலைத் தோட்டம் என்ற பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த மொகமட் ராயிப் என்ற மூன்று வயதுச் சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக மரணமடைந்துள்ளான்.

நேற்று முன்தினம் மாலை வீட்டிலுள்ளவர்கள் மரண வீடு ஒன்றுக்குச் சென்ற சமயம் இந்தச் சிறுவன் இன்னொறு சிறுவனுடன் பட்டம் விட்டுக்கொண்டிருந்த சமயம் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனிருந்த சிறுவன் இதன் பாரதூரம் தெரியாது இது பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வழியாகச் சென்ற ஒருவர் நீர் குட்டையில் பாதணி ஒன்று மிதப்பதைக் கண்டதன் மூலமே விடயம் தெரிய வந்துள்ளதாகவும் அதன் பின்பே சிறுவனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் அவர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் கழிந்து விட்டதன் காரணமாக ஏற்கனவே உயிர்பிரிந்த நிலையில் சடலத்தை வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

வத்தேகம பொலீஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மானபங்கத்திலிருந்து தப்பிக்க ஓடும் ரெயிலில் இருந்து குதித்த கல்லூரி மாணவி
Next post மாணவர்களுக்கு ஆபாச சீ.டி.க்கள் விற்பனை செய்தவருக்கு அபராதமும் சிறையும்