ஓடிக்கொண்டிருந்த வேன் தலைகீழாக கவிழ்ந்தது; அதிஷ்டவசமாக தப்பினர்
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் சின்னமுகத்துவார வளைவில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வேன் ஒன்று உடைந்து தலைகீழாகி சுக்குநூறகியதுபோதும் பயணம் செய்த இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
விபத்தில் வாகத்தை செலுத்தி மூதூரை சேர்ந்த எம்.எம்.ஜெசீம் (32), அதே இடத்தை சேர்ந்த ஆர். றாபிக் (24) இருவருமே சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். வேனில் பயணித்த இவ்விருவரும் மூதூரைச் சேர்ந்தவர்களாவர்.
மூதூரில் இருந்து பொத்துவிலுக்கு சென்று பயணிகள் சிலரை விட்டு விட்டு திரும்பும் வழியில் அக்கரைப்பற்று சின்னமுகத்துவார வளைவை அண்மித்த போது முன் டயர் கழன்றதினாலேயே இச்சம்பவம் நடைபெற்றதாக சாரதி எம்.எம்.ஜெசீம் தெரிவித்தாh
வாகனம் வீதியை விட்டு விலகி வீதி ஓரத்தில் உள்ள சில பாதுகாப்பு கட்டைகளையும் உடைத்து முன்னால் இருந்த கட்டை ஒன்றுடன் மோதி நின்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating