நாய் மீது வழக்கு பதிவு
Read Time:1 Minute, 20 Second
இந்தியாவின் உத்திர பிரதேஷ் மாநிலத்தின் புலண்ட்ஷஹர் மாவட்டத்தில் விசித்தரமான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த உதவி பொலிஸ் அதிகாரியொருவரை கடித்த குற்றச்சாட்டில் கட்டாக்காலி நாயொன்றின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன்னை கடித்து காயப்படுத்திய நாய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் குறித்த அதிகாரி முறையிட்டுள்ளார்.
எனினும் பொலிஸார் இதற்கு இணங்காததுடன் அவரை, ஆற்றல்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் தொடர்ந்தும் தனது நிலைப்பாட்டிலிருந்த பொலிஸ் அதிகாரியின் கோரிக்கைக்கு அமைய குறித்த பொலிசை காயப்படுத்திய குற்றவாளி என்ற இடத்தில் ‘நாய்’ என குறிப்பிட்டு சட்டப்பிரிவு 289 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating