பேஸ்புக்கில் இளைஞருடன் புகைப்படம் தரவேற்றம்; மற்றுமொரு மாணவி தற்கொலை
Read Time:1 Minute, 25 Second
பேஸ்புக் இணையத்தளத்தில் தனது புகைப்படத்துடன் வேறொரு இளைஞரின் புகைப்படம் தரவேற்றம் செய்யப்பட்ட காரணத்தால் மன்னாகொட பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
19 வயதுடைய உயர்தரம் கற்கின்ற மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் இணையத்தளத்தின் ஊடாக ஜா-எல பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் குறித்த மாணவிக்கு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த இளைஞர் நேற்று மாணவியின் வீட்டுக்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பேஸ்புக்கில் வெளியான புகைப்படம் காரணமாக அண்மையில் குருநாகல் ஜோன் கொத்தலாவல பாடசாலையின் மாணவி ஒருவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating