காதலர் தினத்தில் நடந்த கொடுமை..

Read Time:1 Minute, 29 Second

004காதல் தோல்வியினால் விரக்தியுற்ற நபர் ஒருவர், காதலர் தினத்தில் காதல் ஜோடிகள் திரையரங்கில் அருகருகே அமர்ந்து திரைப்படம் பார்ப்பதை தடுப்பதற்கு பாடுபட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

ஷாங்காய் நகரைச் சேர்ந்த இந்த நபரின் காதலி கடந்த வருடம் பிரிந்து சென்று விட்டார். அதனால் தான் தனிமையில் வாடும் நிலையில் காதலர் தினத்தில் காதல் ஜோடிகள் அருகருகே அமர்ந்து படம் பார்ப்பதை தடுக்க வேண்டுமென அவர் தீர்மானித்தாராம்.

இதற்கான வழியாக ஷாங்காய் நகரின் ஷின்ஷியாட்டி பிரதேசத்திலுள்ள பிரபல திரையரங்குகளில் காதலர் தினத்தின் படக்காட்சிக்கான ஒற்றை இலக்க ஆசனங்களின் டிக்கெட்டுகளை தானே வாங்க ஆரம்பித்தார்.

இந்நபர் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏனையோரையும் இந்நடவடிக்கையில் இணைந்து கொள்ளுமாறு கோரினார்.

இதனால் குறித்த தினத்தில் காதல் ஜோடிகளுக்கும் ஏனைய தம்பதிகளுக்கும் திரையரங்குகளில் ஒன்றுவிட்டு ஒரு ஆசனமே கிடைத்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் கூத்தில் ஈடுபட்ட நடிகை -பொலிசாரால் துரத்தி பிடிப்பு
Next post நடிகையின் வாய்ப்பை பறித்தார் பூனம்