மாணவிகள் துஷ்பிரயோக சம்பவம்; பாடசாலை வேன் சாரதி கைது
Read Time:1 Minute, 12 Second
கொழும்பு மஹரகம பகுதியில் 4 பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை சேவையிலீடுபடும் வேன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
9 வயதான இந்த மாணவிகளை வேனில் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும்போதே சாரதியினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர்கள் பாடசாலை ஆசிரியர்களுக்கு அறிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட சாரதி மஹரகம பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 4 மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் பொருட்டு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating