8 மாணவிகள் துஷ்பிரயோகம்: உப-ஆசிரியர் கைது
Read Time:1 Minute, 2 Second
கஹட்டகஸ்திகிலிய பகுதியிலுள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவிகளில் 8 பேரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உப-ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் கற்பித்த உப- ஆசிரியர் கடந்த பல மாதங்களாக இந்த 8 மாணவிகளையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என்று தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரான உப-ஆசிரியர் அந்த பிரதேசத்திலேயே வேறு ஒரு பாடசாலைக்கு மாற்றம் பெற்று சென்றிருந்த நிலையிலேயே அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating