சவப்பையில் அடைக்கப்பட்ட முதியவர் உயிருடன் எழுந்தார்..

Read Time:1 Minute, 56 Second

023உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டதாக கருதிய பலர் மீண்டும் உயிருடன் திரும்பும் அதிசய சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கிறது.

இதுபோல அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு வால்டர் வில்லியம்ஸ்(78) என்பவர் உயிர் பெற்று எழுந்தார். மிச்சிசிப்பி பகுதியில் வசித்து வந்த அவர் திடீரென்று மூச்சுபேச்சு இன்றி கிடந்தார்.

அவர் இறந்து விட்டதாக கருதி வால்டரின் உடலை சவப்பையில் வைத்து ஜிப்பை இழுத்து நன்றாக மூடி வைத்தனர்.

பிறகு இறுதிச்சடங்கு நடக்கும் இடத்துக்கு தூக்கிச்சென்று ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது சவப்பைக்குள் இருந்து கையால் குத்துவிடுவதை ஊழியர்கள் கவனித்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே உறவினர்களை அழைத்து காட்டினர். பையை திறந்த போது வால்டர் வில்லியம்ஸ் உயிருடன் இருப்பது தெரியவந்தது. அதன்பிறகு அவரை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

உயிர் பிழைத்த விவரத்தை அறிந்து வால்டர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இச்சம்பவம் பற்றி மருத்துவர் கூறுகையில், இது ஒர் ஆச்சரிய சம்பவம் தான். இவருடைய பேஸ்மேக்கர் (இதய துடிப்பை சீராக இயங்க வைக்கும் சாதனம்) சற்று நின்று விட்டு பிறகு மீண்டும் இயங்கி இருக்கிறது. இதுவே குழப்பத்திற்கு காரணம் என்று விவரித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழிவாங்க மனைவியின் ஆபாச போஸ்டர்களை வீதி எங்கும் ஒட்டிய கணவன்
Next post பிகினிக்கு தயாரான நடிகை!