நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவரும் இளைஞர்கள் இருவரும் பலி
Read Time:51 Second
வெலிமடை மற்றும் பண்டாரவெல பிரதேசங்களில் நீரில் மூழ்கி இன்று நால்வர் உயிரிழந்துள்ளனர்.
திமுதுகம கல்வல கங்கையில் குளிக்கச் சென்ற அண்ணன் (13) தம்பி (11) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கடந்த காலங்களாக அதிக மழை பெய்தமையின் காரணமாக கல்வல கங்கையில் 10 அடி வரையில் தண்ணீர் உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பண்டாரவளை, பிட்டிய கெதற பணங்கல வாவியில் குளிக்கச் சென்ற ஐவரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
19 வயதான இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Average Rating