வெள்ளவத்தையில் விபசாரவிடுதி: ஐவர் கைது
Read Time:1 Minute, 15 Second
கொழும்பு வெள்ளவத்தை, ஹெவ்லொக் வீதியில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்கள் நால்வர் உட்பட முகாமையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட பெண்கள் 25 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பாணந்துறை, அலப்பதெனிய, மீகொடை, ரத்மலானை மற்றும் காலி போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னார்.
Average Rating