99 புள்ளிகளை பெற்றமைக்காக, தன்னைத்தானே தண்டித்து கொண்ட சிறுவன்..
9 வயது சிறுவன் ஒருவன் பாடசாலையில் இடம்பெற்ற இறுதி பரீட்சையில் சராசரியாக 99 புள்ளிகளைப் பெற்றமைக்காக தன்னைத் தானே தண்டித்து கொள்ளும் முகமாக தனது வயிற்றில் 4 தையல் ஊசிகளை உட்செலுத்திய விபரீத சம்பவம் சீனாவில் இடம் பெற்றுள்ளது.
ஹெயிலோங்ஜீயாங் மாகாணத்தை சேர்ந்த மேற்படி சிறுவன் இதற்கு முன் இடம்பெற்ற பரீட்சைகளில் சராசரியாக 100 புள்ளிகளை பெற்று வந்திருந்த நிலையில் தற்போது ஒரு புள்ளி குறைந்ததால் மிகவும் மன விரக்தியடைந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவனை குளிக்க வைப்பதில் ஈடுபட்ட அவனது தந்தை தனது மகனின் வயிற்றில் ஏதோ கூர்மையான பொருட்கள் இருப்பதை கண்டறிந்து விசாரித்த போதே உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனையடுத்து மேற்படி சிறுவன் உடனடியாக ஹார்பின் மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
தொடர்ந்து அம்மருத்துவமனையின் மருத்துவர்கள் இரு மணித்தியாலங்கள் போராடி சிறுவனின் வயிற்றை ஊடுருவியிருந்த தையல் ஊசிகளை அகற்றியுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம் உலகிலேயே அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்கள் வரிசையில் சீன மாணவர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
Average Rating