11வயது மாணவியை காதலித்த 5சிறுவர்கள்: இருவர்மீது பாலியல் குற்றச்சாட்டு
11 வயது பாடசாலை மாணவியோருவர் ஐந்து சிறுவர்களைக் காதலித்த பின்னர் இந்த ஐந்து சிறுவர்களில் இருவர் அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கொழும்பு பொலிஸ் தலைமையக சிறுவர் மற்றும் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரியவந்துள்ளது.
கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைதான 14 மற்றும் 15 வயதான இரு சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவி நீர்கொழும்பு நுகவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். அப்பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 7 ஆம் ஆண்டில் கல்வி பயில்கின்றார்.
இவர் அவ்வப்போது ஐந்து சிறுவர்களுடன் காதல் தொடர்பு கொண்டுள்ளார்.
மாணவியின் ஐந்து காதலர்களில் இரு காதலர்களின் இந்த மாணவியை அவ்வப்போது துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினர் மாணவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நீர்கொழும்பு –உக்கிரபுர பகுதியைச் சேர்ந்த இரு மாணவ சிறுவர்களை கைது செய்தனர்.
நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இச் சிறுவர்கள் ஆஜர் செய்யப்பட்ட போது இருவரையும் தலா 50000 ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கும் படி நீதிபதி ஏ.எம்.என்.பி.அமரசிங்க உத்தரவிட்டார்.
Average Rating