கைது செய்யச் சென்ற பொலிஸாரின் கைவிரல்களை, வெட்டிக் காயப்படுத்திய நபர்..
கொலன்னர் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பாதெனை ஓமல்பே, பிரதேசத்தில் வைத்து நேற்றுக்காலை தாக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போதே இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்த ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரிகளின் கை விரல்களை வெட்டிக் காயப்படுத்திவிட்டு சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.
மதுபோதையில் அசாதாரணமாக செயற்பட்டமை தொடர்பிலேயே சந்தேக நபருக்கு எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தால் பிடியாணை விதிக்கப்பட்டிருந்தது.
பொலிஸ் அதிகாரிகள் இருவரும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை மணிராசகுளம், கல்குளி, பிரதேசத்தில் ஞயிற்றுக்கிழமை இரவு போக்குவரத்து ஒழுங்குபடுத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது கிரைனட்தாக்குதல் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கிரைனைட்டின் மேல் பகுதி திறக்கப்படாத காரணத்தால் கிரைனைட் வெடிக்கவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
கிரைனைட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் இது வரைக்கும் எந்தவொரு தகவலும் கிடைக்க வில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.
Average Rating