மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை..
Read Time:1 Minute, 15 Second
தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று 04.03.2014.விசாரணைக்கு வந்தபோது அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி பிரேமா சுவர்ணாதிபதி இத்தீர்ப்பை அறிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 லட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு குற்றவாளிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அவ்வாறு நட்டஈடு வழங்காவிட்டால் குற்றவாளிக்கு மேலும் இரண்டு வருடங்கள் சிறை தண்டனையை அதிகரிக்குமாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், 5000 ரூபா தண்டப் பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிட்டால் மேலும் ஒரு வருட சிறை தண்டனை அனுபவிக்குமாறும் நீதிபதி பிரேமா சுவர்ணாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Average Rating