மட்டக்களப்பு, துரிசியிலிருந்து சறுக்கி விழுந்து குடும்பஸ்தர் மரணம்
Read Time:1 Minute, 15 Second
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த சிவலிங்கம் செல்வராசா (வயது 32) என்பவர் துரிசியிலிருந்து சறுக்கி விழுந்து நேற்று மரணமடைந்துள்ளார்.
இவர் துரிசியிலிருந்து சறுக்கி முறுத்தானை ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கியதாக பொலிஸார் கூறினர்.
03 பிள்ளைகளின் தந்தையான இவர் வயல் காவலுக்குச் சென்றுவிட்டு, சைக்கிளை தோளில் சுமந்துகொண்டு துரிசியின் மீது ஏறி நடந்து வந்து கொண்டிருந்த போதே, இந்த அனர்த்தத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது மரணம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating